Sunday, August 16, 2009

காதலிகளுக்காக ..!!



ஓர் இரவு
பௌர்ணமி நிலவு
என் அறைக்குள்
இரு பெண்களுக்குள் சண்டை !
யார் முதலில் என்னை
தழுவுவது என்று..!!

இருவருவமே என் அருமை காதலிகள்,
எனக்கு இன்பமூட்டும் கண்மணிகள்.
இருவரையும் தேற்ற முயன்றேன்.
முயலவில்லை !

ஒருத்தி என்னை அணைக்க முயன்ற வேளையிலே,
ஆவேசமாய் இன்னொருத்தி என்னை கட்டி முத்தமழை பொழிந்தாள்..!!
யார் இந்த அழகிகள்..??
அணைக்க முயன்றவள் "தூக்கம்" மங்கை !
முத்தமிட்டவள் "கவிதை" மங்கை !!

அவளை வடித்தேன்
இங்கே எழுத்துக்களாக..!!


-[JB]-

1 comment:

  1. நித்திரை தேவியின்
    பழி வாங்கும் படலம்
    உனது விழிகள் வடித்திருக்கும்
    மறுநாள்!
    பரவசத்திருக்கு மட்டும் தான்
    இடமோ
    தங்களின் இந்த
    தமிழ் துளிகளில்?

    :)

    ReplyDelete