Sunday, November 29, 2009
..உலகிற்கு அமைதி வேண்டி..
இந்த உலகம் எதற்கு ?
பால் பொழியும் வெண்ணிலவும்,
சுட்டெரிக்கும் சூரியனும்,
மின்னும் நட்சத்திரமும்
யாருக்காகப் படைக்கப்பட்டது ?
மனிதர் என்ற ஒப்பற்ற ஜீவன்கள் இன்பமாக வாழத் தானே!
பின்பு ஏன் இந்த பிளவு படுத்தும் எல்லை கோடுகள்?
உடைந்து போகின்றனவே இதயங்கள்,
யார் இதை தைப்பது?
கண்ணீர், காயம், இரத்தம், வலி எல்லோருக்கும் ஒன்று தானே.
எல்லாரும் வந்தது கருவறையில் இருந்துதானே ?
அவர் வலி கண்டு இவர் சிரிப்பது ஏன்?
அவர் வலி என் வலி என்று எண்ணி
இவர் கண்கள் ஈரமாக வேண்டாமா?
இதயங்களுக்குள் இடைவெளி வேண்டாம், தீவிரவாதம் வேண்டாம்,
சாதி, மதம், மொழி, கொள்கை என்ற பெயர்களில் வேற்றுமையைப் புகுத்தாதீர்கள்.
நாட்களை மகிழ்ச்சியாக்கி, அன்பும் பாசமும் கொண்டு வாழ்கையை வாழுங்கள்.
மக்களை உயர்வாக எண்ணி அன்பு பாராட்டுங்கள்.
எதிர்கால சந்ததியினர்களுக்கு போர், தீவிரவாதம் என்ற சொற்களை
அன்பும், பாசமும் வென்று விட்டது என்ற புதியதோர் பாடம் புகட்டுங்கள்.
Sunday, August 30, 2009
உயிரை தொலைத்தேன் - பாடல் வரிகள்
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தால் ... ஆ ஆ ...
என்னில் எனதாய் நானே இல்லை ...
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே..!!
உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ ...
இது நான் காணும் கனவோ நிஜமோ
அன்பே உயிராய் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்.!
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்..!!
விடியும் வரை கனவின் நிலை உனதாய்
இங்கே தினம் ஏங்குதே..
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில் ..
உயிரை தொலைத்தேன் உன்னில் நானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தால் ..ஆ ஆ ...
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே ..
உன்னோடு நான் மூழ்கினேன்.
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண்பார்க்கும் இடமெங்கும் நீதான் ..
விடியும் வரை கனவின் நிலை உனதாய்
இங்கே தினம் ஏங்குதே ..
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில் . .
உயிரை தொலைத்தேன் உன்னில் தானோ ..
இது நான் காணும் கனவோ நிஜமோ ..
மீண்டும் உன்னை காணும் மனமே ..
வேண்டும் எனக்கே மனமே மனமே .!!
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தால் ... ஆ ஆ ...
என்னில் எனதாய் நானே இல்லை ...
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே..!!
உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ ...
இது நான் காணும் கனவோ நிஜமோ
அன்பே உயிராய் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்.!
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்..!!
விடியும் வரை கனவின் நிலை உனதாய்
இங்கே தினம் ஏங்குதே..
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில் ..
உயிரை தொலைத்தேன் உன்னில் நானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தால் ..ஆ ஆ ...
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே ..
உன்னோடு நான் மூழ்கினேன்.
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண்பார்க்கும் இடமெங்கும் நீதான் ..
விடியும் வரை கனவின் நிலை உனதாய்
இங்கே தினம் ஏங்குதே ..
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில் . .
உயிரை தொலைத்தேன் உன்னில் தானோ ..
இது நான் காணும் கனவோ நிஜமோ ..
மீண்டும் உன்னை காணும் மனமே ..
வேண்டும் எனக்கே மனமே மனமே .!!
Labels:
Kaadhal vaendum,
Lyrics,
Malaysian Album,
uyirai tholaithae
Sunday, August 23, 2009
ம்.. ம்...
இது நோயா ?
என்
வைற்றுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
இது என்ன
காதலா..?
பன்றி காய்ச்சலா..?
ஐரோப்பிய நாணம்
என்னோடு பேசிய வேளையிலே,
வெட்கம் தாளாது சிரித்தது
பால்நிலா...
மெழுகுவத்தி வெளிச்சத்தில்..!!
சிற்பம்
காதலும் சிற்பமும்
ஒன்று போல..!
நீ சிரிக்கும் பொது
நான் சில்லாய் சிதருகின்றேன் ..!!
நீ என்னுள்ளே
காதலை செதுக்குகின்றாயோ?
என்
வைற்றுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
இது என்ன
காதலா..?
பன்றி காய்ச்சலா..?
ஐரோப்பிய நாணம்
என்னோடு பேசிய வேளையிலே,
வெட்கம் தாளாது சிரித்தது
பால்நிலா...
மெழுகுவத்தி வெளிச்சத்தில்..!!
சிற்பம்
காதலும் சிற்பமும்
ஒன்று போல..!
நீ சிரிக்கும் பொது
நான் சில்லாய் சிதருகின்றேன் ..!!
நீ என்னுள்ளே
காதலை செதுக்குகின்றாயோ?
Sunday, August 16, 2009
காதலிகளுக்காக ..!!
ஓர் இரவு
பௌர்ணமி நிலவு
என் அறைக்குள்
இரு பெண்களுக்குள் சண்டை !
யார் முதலில் என்னை
தழுவுவது என்று..!!
இருவருவமே என் அருமை காதலிகள்,
எனக்கு இன்பமூட்டும் கண்மணிகள்.
இருவரையும் தேற்ற முயன்றேன்.
முயலவில்லை !
ஒருத்தி என்னை அணைக்க முயன்ற வேளையிலே,
ஆவேசமாய் இன்னொருத்தி என்னை கட்டி முத்தமழை பொழிந்தாள்..!!
யார் இந்த அழகிகள்..??
அணைக்க முயன்றவள் "தூக்கம்" மங்கை !
முத்தமிட்டவள் "கவிதை" மங்கை !!
அவளை வடித்தேன்
இங்கே எழுத்துக்களாக..!!
-[JB]-
Sunday, August 9, 2009
சிரிப்பு
உன்
சிரிப்பில்
வந்த இசையை..!
என் பேனா
எப்படி
மொழி பெயர்க்கும் ??
படைப்பு
கவிதை எழுத முயன்றேன்,
இயலவில்லை :-(
உன்
பெயர் எழுதினேன்
ஓர் வார்த்தையில்
காவியம்..!!
யார் நீ
மாதா,
பிதா,
குரு,
தெய்வம்,
....அப்போது எல்லாமாகிய
நீ ???
திருட்டு
காணாமல் போனவர்களை பற்றிய அறிவுப்பு,
அவன் ஏங்கினான்
தொலைந்த இதயத்தோடு..!!
இயற்பியல்
மறக்க வேண்டியது மறக்காமல் போவதும்,
மறக்கக்கூடாது மறந்து போவதும்,
என்ன நியூட்டனின் நாலாவது விதியா ??
Subscribe to:
Posts (Atom)