Friday, September 14, 2012

நாணயம் - நான் போகிறேன் !!

பல்லவி :
நான்  போகிறேன்  மேலே  மேலே !
பூலோகமே  காலின்  கிழே
விண்மீன்களின்  கூட்டம் என்  மேலே !!

பூ  வாளியின்  நீரைப்  போலே !
நீ  சிந்தினாய்   எந்தன்  மேலே
நான்  பூக்கிறேன்  பன்னீர்   பூப்போலே !!

தடுமாறிப்  போனேன்  அன்றே, உன்னைப்  பார்த்த  நேரம்
அடையாளம்  இல்லா  ஒன்றை, கண்டேன்  நெஞ்சின்  ஓரம்!
ஏன்  உன்னைப்  பார்த்தேன்?  என்றே உள்ளம்  கேள்வி  கேட்கும்
ஆனாலும் நெஞ்சம்  அந்த  நேரத்தை நேசிக்கும் !!

சரணம்  1

கண்ணாடி  முன்னே  நின்றே  தனியாக  நான்  பேச
யாரேனும்  ஜன்னல்  தாண்டிப்  பார்த்தால்  ஐயோ !
உள்  பக்கம்  தாழ்ப்பாள்  போட்டும்  அறையினுள் நீ  வந்தாய்
கை  நீட்டி  தொட்டுப்  பார்த்தேன்  காற்றை  ஐயோ !!

என்  வீட்டில்  நீயும்  வந்து  சேரும்  காலம்  எக்காலம்
பூ  மாலை  செய்தே வாடுதே !
என்  மெத்தை  தேடும்  போர்வை,  யாவும்  சேலை  ஆகாதோ 
வாராதோ  அந்நாளும்   இன்றே  ஹான் !!

சரணம்  2

என்  தூக்கம்  வேண்டும்  என்றாய்  தர  மாட்டேன்  என்றேனே 
கனவென்னும்  கள்ள  சாவி  கொண்டே  வந்தாய் !
வார்த்தைகள்  தேடி  தேடி  நான்  பேசி  பார்த்தேனே
மௌனத்தில்  பேசும்  வித்தை  நீதான்  தந்தாய் !!


அன்றாடம்  போகும்  பாதை  யாவும்  இன்று  மாற்றங்கள்
காணாமல்  போனேன்  பாதியில் !
நீ  வந்து  என்னை  மீட்டு  செல்வாய்  என்று  இங்கேயே
கால்  நோக  கால்  நோக  நின்றேன் !!
--------------------------------------------------------------------------------------------------------



மிக அருமையான பாடல் - என்னைப் பறக்கச் செய்யும் வரிகள்..!!

அன்புடன் - பாலாஜி !!

No comments:

Post a Comment